/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூர் மெயின்ரோட்டில் ஆக்ரமிப்பு பொதுமக்கள் அவதிவள்ளியூர் மெயின்ரோட்டில் ஆக்ரமிப்பு பொதுமக்கள் அவதி
வள்ளியூர் மெயின்ரோட்டில் ஆக்ரமிப்பு பொதுமக்கள் அவதி
வள்ளியூர் மெயின்ரோட்டில் ஆக்ரமிப்பு பொதுமக்கள் அவதி
வள்ளியூர் மெயின்ரோட்டில் ஆக்ரமிப்பு பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 08, 2011 03:46 AM
வள்ளியூர் : வள்ளியூர் மெயின்ரோட்டில் கடைகளின் முன் பல்வேறு ஆக்ரமிப்புகளால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் கஷ்டப்படுகின்றனர்.வளர்ந்து வரும் நகரங்களில் வள்ளியூரும் ஒன்றாகும்.
மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப ஊரில் கடைகளும், வாகன போக்குவரத்தும் பெருகியுள்ளது. வள்ளியூர் மெயின்ரோட்டில் புதிய பஸ்ஸ்டாண்ட் முதல் பழைய பஸ்ஸ்டாண்ட் வரை மக்கள் நடமாட்டம் காலை, மாலை வேளை என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் அதிகமாகவே காணப்படும். ஆனால் மெயின்ரோட்டில் உள்ள கடைகள் முன் அதிகளவில் ஆக்ரமிப்பு காணப்படுகிறது.மேலும் பாதசாரிகள் நடந்து செல்லும் ரோட்டின் ஓரங்களிலும் நடைபாதை வியாபாரிகள் ஆக்ரமித்து வருகின்றனர். இதை தவிர ரோட்டின் ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் முறையாக நிறுத்தப்படாமல் குறுக்கும், நெடுக்குமாக கண்டபடி ஒழுங்கீனமாக நிறுத்தப்பட்டிருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் நடந்து செல்பவர்கள் ரோட்டின் ஓரமாக நடந்து செல்ல முடியாமல் ரோடு வழியாக செல்வதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.எனவே பொதுமக்களின் நலன் கருதி வள்ளியூர் மெயின்ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு தடையாக இருக்கும் ஆக்ரமிப்புகளை அகற்றவும், டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான இடங்களை அறிவித்து போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


