/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குழந்தை தொழிலாளர்விழிப்புணர்வு கருத்தரங்குகுழந்தை தொழிலாளர்விழிப்புணர்வு கருத்தரங்கு
குழந்தை தொழிலாளர்விழிப்புணர்வு கருத்தரங்கு
குழந்தை தொழிலாளர்விழிப்புணர்வு கருத்தரங்கு
குழந்தை தொழிலாளர்விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : செப் 16, 2011 01:28 AM
திருப்பூர்:தேசிய குழந்தை தொழிலாளர் இயக்கம் மற்றும் திருப்பூர் புனித
ஜோசப் மகளிர் கல்லூரி சார்பில், குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது
குறித்த கருத்தரங்கு நடந்தது.தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர்
விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதி
செய்யவும், இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் புதிய திட்டங்கள்
செயல்படுத்தும்போது, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களையும் இணைத்துக் கொள்ள
வேண்டும்.
திருப்பூரில் செயல்படும் 11 சிறப்பு பள்ளிகளை கண்காணித்து,
குழந்தைகள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார்.
குழந்தைகள் நலனை பாதுகாக்க தன்னார்வ குழுக்கள் அமைப்பது குறித்தும்,
குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்துவது பற்றியும், குழந்தைகள் நல குழு முன்னாள் தலைவர் ஸ்டேன்லி
பீட்டர் பேசினார்.சேவ் அமைப்பு இயக்குனர் அலோசியஸ், நாட்டு நலப்பணி திட்ட
அலுவலர்கள் நித்யா, கிருத்திகா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட கள அலுவலர்
ராஜ்குமார் உட்பட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


