Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

ADDED : ஆக 22, 2011 10:59 PM


Google News

கோவை : கோவை ஆர்.எஸ்.புரத்தில் 34.76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை, வீடியோ கான்பரன்சிங் முறையில், முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

கோவை, ஆர்.எஸ்.புரம், சுப்பிரமணியம் ரோட்டில் பி2 சட்டம்- ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன், கடந்த 2007ல் இருந்து புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. இக்கட்டத்தின் மேல் பகுதியில் கூடுதலாக இரண்டு தளங்களை 34.76 லட்சம் ரூபாய் செலவில் காவலர் வீட்டு வசதி வாரியம் மதிப்பீடு செய்து கட்டி முடித்தது. இக்கட்டடத்தின் கீழ் தளத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு, முதல் தளத்தில் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், இரண்டாம் தளத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகங்கள் செயல்பட உள்ளன. இக்கட்டடத்தின் திறப்பு விழா நேற்று பகல் 1.30க்கு நடந்தது. கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அம்ரேஷ்புஜாரி, துணை கமிஷனர்கள் ஹேமா கருணாகரன், செந்தில்குமார், விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us