Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு

தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு

தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு

தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு

ADDED : ஆக 06, 2011 02:18 AM


Google News

பரங்கிப்பேட்டை : மோட்டார் பைக்கில் வந்த தம்பதியரிடம் 10 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயரங்கன்.

இவரது மனைவி மஞ்சுளா, 27; இருவரும் நேற்று இரவு 8 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் பைக்கில் வந்தனர்.கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே அவர்களைத் தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பினர். மோட்டார் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மஞ்சுளா காயமடைந்தார்.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us