Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்

துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்

துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்

துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்

ADDED : ஆக 05, 2011 02:04 AM


Google News
பெருந்துறை: துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், பள்ளி நிர்வாகம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக, மாவட்ட கலெக்டருக்கு ஊர் மக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தில் கூறியுள்ளதாவது: துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி நிர்வாகம் ஆறாம் வகுப்புக்கு 250 ரூபாய், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு 300 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு 350 ரூபாய், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கு 400 முதல் 1,200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளியில் நன்கொடை கொடுக்க முடியவில்லை என்பதால்தான், அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பள்ளி வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us