புதிய தலைமைச் செயலகம்: விசாரணை கமிஷனை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
புதிய தலைமைச் செயலகம்: விசாரணை கமிஷனை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
புதிய தலைமைச் செயலகம்: விசாரணை கமிஷனை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி தங்கராஜ் கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த, தி.மு.க., எம்.எல்.ஏ., உள்ளிட்ட இரண்டு பேர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் தொடர்பாக, எந்த புகாரும் வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் பாதிக்கப்படுவதாகவும், எம்.எல்.ஏ., என்கிற முறையில் அரசாணை குறித்து கேள்வி எழுப்புவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் எழுப்பியுள்ள முகாந்திரங்கள், வாதாடுவதற்குரியது. மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான முகாந்திரங்கள் உள்ளன. எனவே, இம்மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இதற்கு இரண்டு வாரங்களில் அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
விஜயலட்சுமி மனுவை விசாரித்த 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மனுதாரர் ஆர்வமாக உள்ளார் என, அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.