Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் பலி

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் பலி

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் பலி

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் பலி

ADDED : ஆக 09, 2011 01:22 AM


Google News
மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டினம் கிராமத்தில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.மன்னார்குடி மகாதேவப்பட்டினம் கீழவாடித் தெருவை சேர்ந்தவர் ராதா (35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (32). இவர்களுக்கு தினேஷ் (12) என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், அஜிதா (8) என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

நேற்று அதிகாலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், வெறுப்படைந்த தமிழரசி கணவன் வேலைக்கு சென்றவுடன் டெமக்கரான் மற்றும் குருனை மருந்தை வாங்கி சென்று குழந்தைகளுக்கு வாயிலும், காதிலும் ஊற்றி விட்டு அதே போன்று தானும் விஷம் குடித்தார்.குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு மூவரையும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார். உயிருக்கு போராடிய நிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பரவாக்கோட்டை போலீஸ் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us