ADDED : ஆக 25, 2011 11:28 PM
சூலூர் : கண்ணம்பாளையம், கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு
மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி துணைத்
தலைவர் இந்துமுருகேசன் வரவேற்றார். நிர்வாக அறங்காவலர் வித்யா கோகுல் தலைமை
வகித்தார். 'டிரிம்பிள்' குரூப்பின் தென் மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை
தலைவர் சுகுமாரன் மாரியப்பன் சிறப்புரையாற்றினார். விஜயலட்சுமி பழனிச்சாமி
அறக்கட்டளை சார்பில் ஏழு மாணவ, மாணவியருக்கு 100 சதவீத கல்விக்கட்டணம்
உதவியாக வழங்கப்பட்டது. இயக்குனர் அன்பழகன், முதல்வர் சுரேஷ் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர். பேராசிரியர் சங்கரசுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்.