ADDED : ஆக 08, 2011 04:07 AM
உடன்குடி : உடன்குடியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, உடன்குடி புதுகாலனி வேலாயுதம் மகன் மாரியப்பன்(48).
இவர் உடன்குடி டவுன் பஞ்.,ல் குடிநீர் விநியோகம் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் கடன் தொல்லை காரண மாக வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரபட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


