ADDED : ஜூலை 11, 2011 11:21 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நகர தலைவர் பழனி வரவேற்றார். ஆலோசகர் நாகராஜ், நிர்வாகிகள் மணிகண்டன், ரமேஷ், ராமன், சந்தானம், மரியசவுரி, சின்னதுரை, மூர்த்தி, காயத்ரி, லதா உள்ளிட்ட பலர் பேசினர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகத்தை தடையின்றி வழங்க வேண்டும். மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான உதவித் தொகையை அனைவருக்கும் வழங் கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


