/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பருத்தி பூச்சி தாக்குதல் தவிர்க்க ஆலோசனைபருத்தி பூச்சி தாக்குதல் தவிர்க்க ஆலோசனை
பருத்தி பூச்சி தாக்குதல் தவிர்க்க ஆலோசனை
பருத்தி பூச்சி தாக்குதல் தவிர்க்க ஆலோசனை
பருத்தி பூச்சி தாக்குதல் தவிர்க்க ஆலோசனை
ஸ்ரீவில்லிபுத்தூர் : பருத்தி செடிகளை மாவுபூச்சி தாக்குதலிலிருந்து காப்பாற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஜெயராஜன் நெல்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதை கட்டுப்படுத்த மீதைல் பாரத்தியான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லிவீதம் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தினை ஒருலிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும் படி தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் பயிரின் பாகங்கள், மாவு பூச்சிகளின் மீதுள்ள மாவு போன்ற படலத்தினுள் நன்கு பரவி படிவதற்காக வேளாண் திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் ,தனுவெட் போன்றவற்றுள்ள ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசலை தெளிக்க வேண்டும், என்றார்.