Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எஸ்.பி.,யிடம் குவிந்தன மனுக்கள்

எஸ்.பி.,யிடம் குவிந்தன மனுக்கள்

எஸ்.பி.,யிடம் குவிந்தன மனுக்கள்

எஸ்.பி.,யிடம் குவிந்தன மனுக்கள்

ADDED : ஜூலை 11, 2011 09:31 PM


Google News
திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 123 மனுக்கள் பெறப்பட்டன; நில மோசடி மற்றும் பண மோசடி தொடர்பான 34 மனுக்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார்.

திருப்பூர் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குறை தீர்ப்பு முகாம், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று நடந்தது; எஸ்.பி., பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். இடம் மற்றும் நிலம் சார்ந்த பிரச்னை குறித்து 51 மனுக்கள்; பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் கடன் பிரச்னை தொடர் பாக 59 மனுக்கள்; குடும்ப தகராறு, கண வன் - மனைவி பிரச்னை குறித்த 13 மனுக் கள் பெறப்பட்டன. நில பிரச்னை சார்ந்த 14 மனுக்கள் மற்றும் பண மோசடி குறித்த 20 மனுக்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us