Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு பெண்கள் பள்ளியில்கட்டணம் வசூலிப்பது ஏன்?

அரசு பெண்கள் பள்ளியில்கட்டணம் வசூலிப்பது ஏன்?

அரசு பெண்கள் பள்ளியில்கட்டணம் வசூலிப்பது ஏன்?

அரசு பெண்கள் பள்ளியில்கட்டணம் வசூலிப்பது ஏன்?

ADDED : ஜூலை 11, 2011 09:29 PM


Google News
பல்லடம் : பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ரூ.1,000 முதல் 1,200 வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவியரிடம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,308 மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 32 பேர் பணிபுரிகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவியரிடம் ரூ.1000 முதல் 1,200 வரை பணம் வசூலிப்பதாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லாரன்ஸிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: மேல்நிலை வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் அடங்கிய ஒரு பாடப்பிரிவு மட்டுமே நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. நாங்கள் நான்கு பாடப்பிரிவுகள் நடத்தி வருகிறோம். மீதமுள்ள மூன்று பிரிவுகள் சுயநிதி பிரிவின் கீழ் நடத்தப்படுகிறது. அப்பிரிவுகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாணவியரிடம் கட்டணம் வசூலித்து சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழ், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம் ஆகிய எட்டு ஆசிரியர்கள் சுயநிதி பிரிவில் பாடம் நடத்துகின்றனர். இவர்களுக்கு சம்பளம் வழங்கு வதற்காக, அரசு அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவில் படிக்கும் மாணவியரை தவிர, சுயநிதி பிரிவில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியரிடம் ரூ.1,000, ரூ.1,200 என கட்டணம் வசூலித்துள்ளோம். இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவியரிடம் மட்டுமே ரூ.1,200 வசூலிக்கிறோம். பிற பாடப்பிரிவுகளில் படிப்போரிடம் ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவியரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில், ஒவ்வொரு மாணவிக் கும் தலா ரூ.200 வீதம்அரசுக்கு கட்டணம் செலுத்தப்படு கிறது. சுயநிதி பிரிவுக்கு தேவையான எட்டு ஆசிரியர்களை அரசே நியமித்து, சம்பளம் வழங்கினால், பள்ளியை மேலும் செம்மையாக நடத்த முடியும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us