/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்
கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்
கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்
கலெக்டர் மாற்றம் ஏன்? பொ.ப.து., மந்திரி விளக்கம்
ஈரோடு: ''கலெக்டர் மாற்றத்துக்கும், தோல் ஆலை மீதான நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை,'' என, அமைச்சர் ராமலிங்கம் விளக்கமளித்தார்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நஞ்சனாபுரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தலா மூன்று சென்ட் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. இது 1988ல் இருந்து வழக்கு தொடர்ந்ததால், பயனாளிகளுக்கு வழங்க முடியாமல் தள்ளி போய் வந்தது. உச்சநீதிமன்றத்திலும் இந்த வழக்கு முடிவுக்கு வந்து, நேற்று அமைச்சர் 23 பயனாளிகளுக்கும் இலவச பட்டா வழங்கினார்.
அமைச்சர் ராமலிங்கம் கூறியதாவது: செயின் பறிக்கும் திருடர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் நில அபகரிப்பு வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தி.மு.க.,வினர் நில அபகரிப்பில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வினர் மீதும் கொடுத்துள்ள புகார் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.


