நகராட்சி பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர்
நகராட்சி பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர்
நகராட்சி பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர்
ADDED : ஜூலை 11, 2011 11:07 PM
கடலூர் : வண்டிப்பாளையம் நகராட்சி துவக்கப் பள்ளிக்கு கடலூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் பிறையோன் தலைமை தாங்கினார். மிட்டவுன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆளுனர் ஜோசப் சுரேஷ்குமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கிப்பேசினார். துணை ஆளுனர் சென்சார் சீனுவாசன், மண்டல தலைவர் பட்டேல், துணைத் தலைவர் ராசன், குணசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.