/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/21 பேருக்கு ரூ. 1.70 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்21 பேருக்கு ரூ. 1.70 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
21 பேருக்கு ரூ. 1.70 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
21 பேருக்கு ரூ. 1.70 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
21 பேருக்கு ரூ. 1.70 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 13, 2011 01:53 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காமராஜ் தலைமையில் குறைதீர்
கூட்டம் நடந்தது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு, ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தலா 6,250 ரூபாய் வீதம் 62
ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஆறு பேருக்கு தலா 2,410 ரூபாய் வீதம்
இலவச சலவைப்பெட்டி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,
கல்லூரி மாணவ, மாணவியர் நால்வருக்கு தலா 22 ஆயிரத்து 100 ரூபாய்க்கு
பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. மொத்தம் 21 பயனாளிக்கு 1.70 லட்சம்
ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., கார்த்திகா,
திட்ட இயக்குனர் வித்யாசாகர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர்
குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.