ADDED : ஜூலை 13, 2011 11:48 PM
பண்ருட்டி: பண்ருட்டி கஸ்தூரிபாய் தெரு, பனங்காட்டு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது.
6 மணிக்கு தசகலசாபிஷேகமும், 8 மணிக்கு கெடிலம் நதிக்கரைக்கு ஊர்வலமாக சென்று நதிக்கரையில் இருந்து 11 மணிக்கு சக்தி கலசத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தது. பகல் ஒரு மணிக்கு செடல் உற்சவமும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8 மணிக்கு மாரியம்மன் வீதியுலா நடந்தது.


