/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி., இயக்குனருக்கு சிறந்த அதிகாரிக்கான விருதுஎன்.எல்.சி., இயக்குனருக்கு சிறந்த அதிகாரிக்கான விருது
என்.எல்.சி., இயக்குனருக்கு சிறந்த அதிகாரிக்கான விருது
என்.எல்.சி., இயக்குனருக்கு சிறந்த அதிகாரிக்கான விருது
என்.எல்.சி., இயக்குனருக்கு சிறந்த அதிகாரிக்கான விருது
ADDED : செப் 13, 2011 12:58 AM
நெய்வேலி : என்.எல்.சி., இயக்குனர் சரத் குமார் ஆச்சார்யாவுக்கு ஆசிய பசிபிக் மனிதவள மேலாண்மை அமைப்பு சிறப்பு விருது வழங்கியுள்ளது.
என்.எல்.சி., மனிதவளத் துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா, பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதில் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார். இவர் பிரபலமான கல்வி நிலையங்களுக்கு கவுரவ பேராசிரியராக சென்று இளம் மனிதவளத்துறை மாணவர்களுக்கு கல்வி கற்பித்து அவர்களது அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தி வருகிறார். தேசிய நிர்வாக மேலாண்மை நிலையத்தின் நெய்வேலி மையத் தலைவராக செயல்பட்டு வரும் இவர் ஸ்கோப் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலைக்குழுவின் மனித வளத்துறையிலும் முக்கிய உறுப்பினராக உள்ளார். இவரது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் ஆசிய பசிபிக் மனிதவள மேலாண்மை அமைப்பு இவருக்கு மனித வளத்துறையின் சிறந்த தலைமை அதிகாரி என்ற சிறப்பு விருது வழங்கியுள்ளது.