ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து டாக்டர் அரிதாஸ் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்து மருத்துவத்துறை இணை இயக்குனர், கலெக்டரிடம் வலியுறுத்தியதின் பேரில் தற்போது இரவு நேரப் பணிக்கு டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.