/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்
அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்
அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்
அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்
திருநெல்வேலி : கூடன்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசவுள்ளார் என நெல்லை எம்.பி., ராமசுப்பு தெரிவித்தார்.
கூடன்குளம் அணு மின்நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் உள்ளாட்சித்தேர்தலை நோக்கமாக கொண்டு சில கட்சிகள் செயல்படுகின்றன. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூடன்குளம் பிரச்னை தொடர்பாக என்னிடம் விசாரித்தார். கூடன்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு நாட்களாக மக்கள் நடத்தி வரும் போராட்டம், மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட அச்சம் குறித்து அவரிடம் கூறினேன். இதுதொடர்பாக இன்று (நேற்று) பிரதமரிடம் பேசுவதாக அமைச்சர் தெரிவித்தார். கூடன்குளம் அணு மின்நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கவும், போராட்டக்குழுவுடன் பேசவும் விஞ்ஞானிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை அனுப்ப வலியுறுத்தியுள்ளேன்.
ரூ. 43 கோடியில் தூண்டில் வளைவு : தமிழகத்தில் கடல்அரிப்பு, இயற்கைச்சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 9 கடலோர மாவட்டங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க கடந்த 2008ம்ஆண்டு 1,012 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு மதிப்பீடு தயாரித்தது. 13வது நிதிக்குழுவில் 200 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தொம்மையாபுரம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழையில் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில்வளைவு அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை துவக்க முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். மத்திய கப்பல் துறை சார்பில் கூத்தங்குழியில் 1.75 கோடி ரூபாய் செலவில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்படவுள்ளது.