Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோயிலில் நிதி முறைகேடு :ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலில் நிதி முறைகேடு :ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலில் நிதி முறைகேடு :ஐகோர்ட் கிளை உத்தரவு

கோயிலில் நிதி முறைகேடு :ஐகோர்ட் கிளை உத்தரவு

ADDED : ஆக 03, 2011 01:35 AM


Google News

மதுரை : சிவகங்கை மாவட்டம் மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில் நிதி முறைகேடு புகாரை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

நாலுகோட்டையை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: நாலுகோட்டை அருகே மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில் உள்ளது.

வெளிநாட்டு பக்தர்கள் இக்கோயிலுக்கு ஏராளமான நிதி வழங்குகின்றனர். ஆதிநாராயணன், வெள்ளைச்சாமி ஆகியோர், அறங்காவலர் எனக்கூறி கொண்டு, கோயில் நிதியை கையாளுகின்றனர். இவர்கள் அறநிலையத்துறையினரால் நியமிக்கப்படவில்லை. மேலும் நிதியை கோயில் பணிகளுக்கு செலவிடாமல், வேறு வழிகளில் செலவிட்டுள்ளனர். இங்கு நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், ''நிதி முறைகேடு குறித்த மனுதாரர் 2010 மே 4ல் வழங்கிய மனுவை இரு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us