ADDED : ஜூலை 21, 2011 01:07 AM
ஈரோடு: பெருந்துறை தெற்கு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 71 பேர், களப்பயணமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.கோவையிலிருந்து ஈரோடு வரும் பாசஞ்சர் ரயிலில், ஈங்கூர் ரயில்வே ஸ்டேஷனில் ஏறி ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.
அங்கு, பல்வேறு ரயில்கள் வந்து செல்வதை மாணவ, மாணவியர் பார்த்தனர். டிக்கெட் கவுன்ட்டர், தகவல் மையம், தொடுதிரை கணினி ஆகியவற்றை பார்த்தனர். மாலை 3 மணிக்கு மீண்டும் ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயிலில் ஏறி ஈங்கூர் சென்றனர்.


