ADDED : ஜூலை 14, 2011 12:31 AM
காரைக்கால் : காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.காரைக்கால் பகுதியில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான விழா மாங்கனி திருவிழா.
இதில் காரைக்கால் மட்டுமின்றி தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். மாங்கனி இத்திருவிழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் கலெக்டர் அறிவித்துள்ளார்.


