ADDED : ஜூலை 21, 2011 02:35 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய அரசின் ஊழல்களை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.
புதிய பஸ் ஸ்டான்ட் அருகில் நடந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் அன்பு மணவாளன் முன்னிலை வகித்தார். சுவாமிநாதன், செல்வராஜ், சண்முகம், பொன்னுசசாமி, சீல்கமுத்து, சுந்தர்ராஜன், முருகானந்தம், விடுதலைக்குமரன், நிரஞ்சனாதேவி, அஞ்சலை உட்பட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் பலர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது மத்திய அரசின் ஊழல்களை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.


