பொள்ளாச்சி : பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆடிவெள்ளி நிறைவு
நாளில் சுமங்கலி பூஜை நடந்தது.
சகல ஐஸ்வர்யம் பெறும் வகையில், வரலட்சுமி
விரதமிருந்த சுமங்கலி பெண்கள், இளம்பெண்கள் மகாலட்சுமி பூஜை செய்தனர்;
பூஜையில் மஞ்சள் கயிறு மாற்றினர். திருவிளக்கு ஏற்றி, வரலட்சுமி
மந்திரங்கள் உச்சரித்து, லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். திருமாங்கல்ய
கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.