Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காஸ் இணைப்புதாரர்களுக்கு வருகிறது புது சிக்கல் : 6 முறைக்கு மேல் வாங்கினால் மானியம் கட்

காஸ் இணைப்புதாரர்களுக்கு வருகிறது புது சிக்கல் : 6 முறைக்கு மேல் வாங்கினால் மானியம் கட்

காஸ் இணைப்புதாரர்களுக்கு வருகிறது புது சிக்கல் : 6 முறைக்கு மேல் வாங்கினால் மானியம் கட்

காஸ் இணைப்புதாரர்களுக்கு வருகிறது புது சிக்கல் : 6 முறைக்கு மேல் வாங்கினால் மானியம் கட்

ADDED : ஜூலை 13, 2011 10:16 PM


Google News

சிவகாசி : காஸ் இணைப்புதாரர்கள் ஆண்டிற்கு ஆறு முறைக்கு மேல் காஸ் வாங்கினால் மானியம்' கட்' ஆவதோடு , 395 க்கு பதில் 935 ரூபாய் வழங்க வேண்டும் என்பதோடு ,இதற்காக வங்கி கணக்கு அவசியம் என்ற புதிய நடைமுறையும் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் 395 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வீட்டு உபயோகதாரர்களுக்கு வழங்கப்படும் இந்த காஸ் , நுகர்வோர் சிலரால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு லாபம் பார்க்கப்படுகிறது.ஒரு சில ஏஜென்சிகள் நுகர்வோர் பெயரில் குறிப்பிட்ட நாட்களில் பதிவு செய்து, ஓட்டல்கள், கார்களுக்கு 800க்கு விற்று லாபம் பார்க்கின்றன . நுகர்வோர் காஸ் கேட்டு பதிவு செய்யும் போது, தட்டுப்பாடு, லோடு வர தாமதம் என கூறி 50 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வழங்குகின்றனர்.



இதை தொடர்ந்து நுகர்வோருக்கு வழங்கப்படும் சமையல் காஸ் தனியார் ஓட்டல் , கார்களுக்கும் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், மாதத்திற்கு ஐந்து அல்லது ஆறுசிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது .காஸ் பெறும்போது அரசு மானிய தொகை 540ஐ சேர்த்து 935 ரூபாய் கட்ட வேண்டும் .இதற்காக இணைப்புதாரர்கள் வங்கியில் கணக்கு துவங்கி அதன் எண்ணை காஸ் எஜென்சிகளிடம் வழங்க வேண்டும் .அதன்படி ஆண்டிற்கு ஆறு காஸ் சிலிண்டருக்கான அரசு மானிய தொகை தலா 540 ரூபாய், வங்கி கணக்கல் எண்ணெய் நிறுவனங்களே நேரடியாக செலுத்தி விடும். ஆறு காஸ் சிலிண்டருக்கு மேல் வாங்கினால் அதற்கான தொகையாக 935 ரூபாய் வசூலிக்கப்படும். இதற்கான உத்தரவு விரைவில் வர உள்ளது.இதன் மூலம் காஸ் இணைப்புதாரர்களுக்கு புது சிக்கல் உருவாக உள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us