ADDED : செப் 15, 2011 03:53 AM
செஞ்சி:செஞ்சி தாலுகா அகலூர் கிராமத்தில் விவசாய சங்கத்தின் சார்பில்
பார்த்தினியம் செடி அழிப்பு முகாம் நடந்தது.விவசாயிகள் சங்கத்தின் சார்பில்
நடந்த முகாமிற்கு கிளை தலைவர் தேவகுமார் தலைமை தாங்கினார்.
செயலாளர்
ஜோலாதாஸ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் விஜயகுமாரி, சித்ரா,
கோவிந்தசாமி, முருகேசன், சுப்பிரமணி, தணிகாசலம், கோவிந்தம்மாள் கலந்து
கொண்டனர். சந்திரா நன்றி கூறினார்.


