ADDED : ஆக 03, 2011 01:50 AM
திட்டக்குடி : பெண்ணாடத்தில் நடந்த விபத்தில் கை இழந்த வாலிபர் சிகிச்சை
பலனின்றி இறந்தார்.
திட்டக்குடி அடுத்த பெண்ணாடத்தில் கடந்த சில
தினங்களுக்கு முன் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற
தனியார் பஸ்சை எதிரே வந்த லாரி உரசியது. இதில் பஸ்சின் ஓரத்தில் பயணம்
செய்த சவுந்திரசோழபுரத்தைச் சேர்ந்த வீரமணி, 26; வலது கை துண்டித்து
படுகாயமடைந்தார். மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்
சேர்க்கப் பட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்த புகாரின்
பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


