ADDED : ஆக 19, 2011 03:53 AM
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம்
கிராமத்தை சேர்ந்தவர் வேம்பன்,50.
கூலித் தொழிலாளியான இவர் கடந்த 16ம் தேதி
காலை, இந்த ஊரிலுள்ள சுடுகாட்டுப்பாதையில் நடந்து சென்றார். அப்போது
பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்தார். முண்டியம்பாக்கம்
அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி
இறந்தார்.திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து
வருகின்றனர்.


