ADDED : ஜூலை 17, 2011 01:35 AM
சேத்தியாத்தோப்பு : தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.சேத்தியாத்தோப்பை அடுத்த மஞ்சக்கொல்லை வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்.
நேற்று முன்தினம் மின் கசிவால் இவரது வீடு தீப்பிடித்தது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில் அவரது வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.