Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பஸ்ஸ்டாண்ட் ரோடு பணி போக்குவரத்தில் மாற்றம்

பஸ்ஸ்டாண்ட் ரோடு பணி போக்குவரத்தில் மாற்றம்

பஸ்ஸ்டாண்ட் ரோடு பணி போக்குவரத்தில் மாற்றம்

பஸ்ஸ்டாண்ட் ரோடு பணி போக்குவரத்தில் மாற்றம்

ADDED : ஜூலை 13, 2011 02:43 AM


Google News
பெரியகுளம் : பெரியகுளம் பஸ்ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் பணி நடப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பெரியகுளம் நகராட்சி பகுதிகளுக்கு சிறப்பு சாலை கட்டும் திட்டத்தில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு சிமென்ட்ரோடு, தார்ரோடு போடும் பணிகள் நடக்கிறது.பஸ்ஸ்டாண்ட் பகுதியான வி.ஆர்.பி., நாயுடுதெரு, சுப்பிரமணியசாவடி தெரு, தெற்குத்தெரு, தெற்குப்புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தார்ரோடு போடும் பணி நடக்கிறது. மதுரை மண்டல செயற்பொறியாளர் மருதுபாண்டி பணியை ஆய்வு செய்தார். கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பஸ்ஸ்டாண்ட்டிற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 வரை பழைய பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து டவுன்பஸ்களும், நுழைவு பகுதியிலிருந்து பிற பஸ்களும் கிளம்பும் என அரசு போக்குவரத்து கழக மேலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us