ADDED : ஜூலை 11, 2011 02:45 AM
பெருந்துறை: அறச்சலூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெயகுமார் (25).
இவர் குடித்து விட்டு வந்து, அடிக்கடி தன் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், ஜெயகுமார் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார். அறச்சலூர் எஸ்.ஐ., கருப்பணன் விசாரிக்கிறார்.