/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அரசு டாக்டர்.இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அரசு டாக்டர்.
இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அரசு டாக்டர்.
இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அரசு டாக்டர்.
இலவச நோட்டு புத்தகம் வழங்கிய அரசு டாக்டர்.
ADDED : ஆக 13, 2011 12:51 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே ராமநாதபுரம் தொடக்க பள்ளியில் படிக்கும், 250 மாணவ,
மாணவியருக்கு, அரசு டாக்டர் ஒருவர், இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்.
ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் கிராம பஞ்சாயத்து, ராமநாதபுரத்தில் தொடக்கப்
பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தனியார்
பள்ளிக்கு நிகராக ஸ்போக்கன் இங்கிலீஸ், சீருடை, பாட வகுப்புகள்,
கம்ப்யூட்டர் வசதிகள் உள்ளது.ஆத்தூர் அரசு மருத்துவமனை சர்க்கரை நோய்
நிபுணர் டாக்டர் சுரேஷ்பிரபு, அவரது தாய் ஓய்வு பெற்ற ஆசிரியை கலாவதி
நினைவாக, பள்ளி தலைமை ஆசிரியை உமாராணியிடம், 250 மாணவர்களுக்கு இலவச
நோட்டு, புத்தகங்கள், டைரி குறிப்பேடுகள் வழங்கினார்.உதவி ஆசிரியர்கள்
மெர்லின்ஷயலஜா, செல்வி, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


