
'நல்லவேளை தப்பிச்சோம்...!'
சென்னை தி.நகர், சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில், சமூக நலச்சங்க துவக்க விழா நடந்தது.
'புது கோஷ்டி கிளம்பிடாதா...?'
கடலூரில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேசும்போது, 'மத்திய அரசு, பஞ்சாப், அரியானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஒரு கிலோ அரிசியை, 19 ரூபாய்க்கு வாங்கி, அந்தியோதயா திட்டம் மூலம், 16 ரூபாய் மானியம் கொடுத்து, மாநில அரசுகளுக்கு மூன்று ரூபாய்க்கு வழங்குகிறது. முன்னாள் முதல்வர் இரண்டு ரூபாய் மானியம் கொடுத்து ஒரு ரூபாய்க்கு வழங்கினார். தற்போதைய முதல்வர், 3 ரூபாய் மானியம் கொடுத்து இலவசமாக வழங்குகிறார். இரு முதல்வர்களுமே, 16 ரூபாய் மானியம் கொடுத்த பிரதமருக்கு நன்றி சொன்னார்களா...? 'பாமாயிலுக்கும் மத்திய அரசு முழு மானியம் தருகிறது. அவர்கள் ரேஷன் அரிசி வழங்கும் பைகளில், ஒரு பக்கத்தில் முதல்வர் படம் போட்டுள்ளனர். மானியம் வழங்கிய பிரதமர் மன்மோகன் சிங் படத்தை மறு பக்கத்தில் போட்டால் என்ன...?' என, கேட்டார். கூட்டத்தில் இருந்த ஒரு காங்., தொண்டர், 'இதென்ன வம்பா போச்சு... சோனியா படம் போடலைன்னு ஒரு கோஷ்டி கிளம்பிடாதா...?' என, 'கமென்ட்' அடித்ததும் அனைவரும் சிரித்தனர்.