ADDED : ஆக 14, 2011 05:17 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் என்ற இடமருகேயுள்ள பண்ணப்புரம் என்ற இடத்தில் ஹார்ன் அடித்தும் வழிவிடாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் கார்த்திக்கேயன் என்பவரை பைக்குகளில் வந்த 6 பேர் வழிமறித்து தாக்கினர்.
இதில் காயமடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சென்றார். தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.