ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்
ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்
ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்
சென்னை : சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வகையில், 1,080 கோடியில், 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, நடப்பாண்டு முதல் ஒருங்கிணைந்த கிராமக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும். தற்போதுள்ள பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, கிராமக் குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் அனைத்து கிராமக் குடியிருப்புகளும் படிப்படியாகப் பயனடையும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* பொது விற்பனை வரிச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ், வசூலிக்கப்படவுள்ள வரிகள், அபராதத் தொகையை வசூலிக்க, தமிழகத்தில் மீண்டும்,'சமாதான்' திட்டம் அக். 1 முதல் செயல்படும். இத்திட்டம், 2012 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.