ADDED : ஜூலை 11, 2011 11:07 PM
கடலூர் : கடலூர் மாவட்ட குளிர்சாதன இயந்திரம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் துவக்க விழா நடந்தது.
கடலூர், வண்ணாரப்பாளையத்தில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தார். விழாவில் துணைத் தலைவர் ராஜன், துணைச் செயலர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.