/உள்ளூர் செய்திகள்/சென்னை/இரு தினங்களில் பல இடங்களில் செயின் பறிப்புஇரு தினங்களில் பல இடங்களில் செயின் பறிப்பு
இரு தினங்களில் பல இடங்களில் செயின் பறிப்பு
இரு தினங்களில் பல இடங்களில் செயின் பறிப்பு
இரு தினங்களில் பல இடங்களில் செயின் பறிப்பு
சென்னை : சென்னையில் கடந்த இரு தினங்களில், பல்வேறு இடங்களில், செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
கொடுங்கையூர்: எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் சரோஜா. நேற்று காலை காய்கறி வாங்க மார்க்கெட் சென்று விட்டு திரும்பிய போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த, 10 சவரன் செயினை பறித்து சென்றனர். பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்துள்ளது. பட்டினப்பாக்கம்: கனகமலைராயன் தெருவில் வசிப்பவர் பிலோமினா. இவர் தனியார் பள்ளியில், நூலகராக உள்ளார். இவரும், இவரது வயதான அம்மாவும், வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். நடக்க முடியாத அம்மாவை வீட்டில் விட்டு விட்டு, நேற்று காலை பிலோமினா கோவிலுக்கு சென்றுள்ளார்.
மாலை வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டு அலமாரியில் இருந்த, 34 சவரன் நகை திருடு போயிருந்தது. அதே நேரத்தில், வீட்டு வேலைக்காரன் ஜான் என்பவரும், காணாமல் போய்விட்டார். இதுகுறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவொற்றியூர்: வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி பிரேமா, 29. வீட்டு வாசல் முன், குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர், பிரேமாவின் ஐந்து சவரன் தாலியை அறுத்துக் கொண்டு மறைந்தார். அதே போல், திருவொற்றியூர் மேற்கு மாடவீதியில் வந்து கொண்டிருந்த வயதான பெண்மணியை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்து, 15 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.மேலும், மணலி மற்றும் எண்ணூர் பகுதியிலும், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
நேற்று முன்தினம்: தொடர்ந்து நேற்று முன்தினம், கோடம்பாக்கம் பகுதியில், சாரதா என்ற பெண்ணிடம், ஒன்பது சவரன் நகையை, அவரது வீட்டருகில் நடந்து செல்லும் போது, டூவீலரில் வந்தவர்கள், பறித்துச் சென்றனர்.