ADDED : ஆக 15, 2011 01:49 AM
மதுரை : வாடிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன்,50.
மகன் ராமச்சந்திரன்,26. இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு பல்சர் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நாகராஜன் மீது ஈச்சர் லாரி மோதியது. அவர் தலை நசுங்கி, மகன் கண் முன் பலியானார். காமாட்சிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் திருமுருகனை, 37 கரிமேடு போக்குவரத்து பிரிவு போலீசார் கைது செய்தனர்.


