ADDED : ஜூலை 21, 2011 10:40 AM
சென்னை : சென்னை அருகே பூவிருந்தவல்லி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கல்லூரி வாகனங்கள் மற்றும் வகுப்பறைகளை மாணவர்கள் சேதப்படுத்தினர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டம் காரணமாக கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அறித்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.