ADDED : ஆக 11, 2011 11:04 PM
சிதம்பரம் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சிதம்பரம் வட்டக் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சிதம்பரம் வட்டக் கிளை கூட்டம் மாவட்ட தலைவர் எழிலன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிதம்பரம் வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பழனியப்பன், துணைத் தலைவராக சாரங்கபாணி, செயலராக சுந்தரமூர்த்தி, துணைச் செயலர் அசோகன், பொருளாளராக குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சீனுவாசன், ஜெயமாலினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.