/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்
கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்
கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்
கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்
ADDED : செப் 11, 2011 11:04 PM
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில், பழநி இடும்பன் கோயில், திண்டுக்கல் ரயிலடி சித்திவிநாயகர் கோயில், கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் அன்னதான திட்ட துவக்கவிழா நேற்று நடந்தது.
சவுந்திரராஜபெருமாள் கோயிலில் நடந்த விழாவில் பழனிச்சாமி எம்.எல்.ஏ., அன்னதான திட்டத்தை துவக்கிவைத்தார். செயல் அலுவலர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க., தொகுதி இணை செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணி, மணி , நகர துணை செயலாளர் ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர். கோயிலில் தினமும் மதியம் 50 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்: ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் அன்னதான திட்ட துவக்கவிழா நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் விசுவநாதன் அன்னதானதிட்டத்தை துவக்கிவைத்தார். அறநிலைய துறை இணை ஆணையர் சுதர்சன்,
செயல்அலுவலர் பாலதண்டாயுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர். பழநி இடும்பன் கோ யில் மற்றும் கொடைக்கானல் ஆனந்திகிரி மாரியம்மன் கோயிலிலும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.