ADDED : செப் 15, 2011 03:48 AM
திருக்கோவிலூர்:அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர்
இறந்தார்.திருக்கோவிலூர் அடுத்த கரடி கிராமத்தை சேர்ந்த முனியன் மகன்
விஸ்வநாதன், 35.
கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் ஆற்காடு கிராமத்தில் இருந்து மோட்டார்
சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தொட்டி அருகே அடையாம் தெரியாத
வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன்
இறந்தார்.விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.


