போடியில் மழை நீர்வரத்து அதிகரிப்பு
போடியில் மழை நீர்வரத்து அதிகரிப்பு
போடியில் மழை நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 13, 2011 02:41 AM
போடி: போடி அருகே உள்ள பூப்பாறை, நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, கட்டப்பனை
உள்ளிட்ட பகுதிகளில் ஏலம், காபி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள்
பயிரிடப்பட்டுள்ளன. சீசன் துவங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு மழை துவங்கி
விட்டது. மேகமூட்டத்துடன் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால்
கடும் குளிர்நிலவி வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தோட்ட
பணிகளை செய்ய முடியவில்லை. குரங்கனி, கொட்டிகுடி, போடி, தேனி, கம்பம்
உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் மழை பெய்தது.
ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததோடு வறண்டு கிடந்த பூமியும்
குளிர்ச்சி அடைந்தது. மானாவாரி விவசாயத்திற்கு பயனாக இருக்கும் என
விவசாயிகள் தெரி வித்தனர்.


