Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சாக்கடையில் கிடந்த பச்சிளங்குழந்தை உடல்

சாக்கடையில் கிடந்த பச்சிளங்குழந்தை உடல்

சாக்கடையில் கிடந்த பச்சிளங்குழந்தை உடல்

சாக்கடையில் கிடந்த பச்சிளங்குழந்தை உடல்

ADDED : ஜூலை 14, 2011 12:02 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் உடலை மீட்டு குழந்தையின் பெற்றோர் யார்? என பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி என்.எஸ்.பி., ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் நேற்று நகராட்சி துப்புறவு பணியாளர்கள் சுத்தம் செய்துக்கொண்டிருந்தனர். அப்போது சாக்கடையில் பச்சிளங் ஆண் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அக்குழந்தை பிறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகியிருக்கும் என தெரிகிறது. பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த ஆண் குழந்தை யாருடையது?. குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை சாக்கடையில் வீசியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us