ADDED : ஜூலை 13, 2011 01:57 AM
உடுமலை : உடுமலை அருகே மலையாண்டிபட்டனம் அரசு உயர்நிலைப்பள்ளியில்,
மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.உடுமலை மலையாண்டிபட்டனம் அரசு
உயர்நிலைப்பள்ளியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மாணவ,
மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அறக்கட்டளை சேர்ந்த லட்சுமி,
ராஜலட்சுமி யோகா மற்றும் சமூக நலக்கல்வி குறித்து பயிற்சி அளித்தனர். மாணவ,
மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.