/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்
இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்
இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்
இன்னும் இரண்டு நாட்கள்: களத்தில் இதுவரை 7092 பேர்
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடிய இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3846 பதவிகளுக்கு 7092 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பழநி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-18, ஊராட்சி தலைவர் - 38, வார்டு உறுப்பினருக்கு 278 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். கொடைக்கானல்: நகராட்சி தலைவருக்கு கோவிந்தன்(அ.தி.மு.க.,), வெங்கடேசன் (பா.ஜ.,) ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். வத்தலக்குண்டு: மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-17, ஊராட்சி தலைவர் -21, வார்டு உறுப்பினர்-150 பேர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு ஏழு பேரும், பட்டிவீரன்பட்டி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு 10 பேரும், அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும் சேவுகம்பட்டி பேரூராட்சி கவுன்சிலருக்கு 17 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
நிலக்கோட்டை: பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு 10 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவருக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு ஏழு பேரும் மனுத்தாக்கல் செய்தனர். வேடசந்தூர்: பேரூராட்சி கவுன்சிலருக்கு 13 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர்-1, ஒன்றிய கவுன்சிலர்-22, ஊராட்சி தலைவர்-67, வார்டு உறுப்பினர்-227. வடமதுரை: ஒன்றிய கவுன்சிலர்-13, ஊராட்சி தலைவர்-24, வார்டு உறுப்பினர்-190. வடமதுரை பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும், அய்யலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு 12 பேரும், எரியோடு பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஒருவரும், கவுன்சிலர் பதவிக்கு நால்வரும் மனுத்தாக்கல் செய்தனர். ஆத்தூர்: மாவட்ட கவுன்சிலர்-4, ஒன்றிய கவுன்சிலர்-19, ஊராட்சி தலைவர்-54, வார்டு உறுப்பினர்-289. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவருக்கு ஒருவரும், கவுன்சிலருக்கு நால்வரும் மனுத்தாக்கல் செய்தனர். குஜிலியம்பாறை: ஒன்றிய கவுன்சிலர்-12, ஊராட்சி தலைவர்-34, வார்டு உறுப்பினர்-162. பாளையம் பேரூராட்சி தலைவருக்கு இருவரும், கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.


