/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சிமாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி
மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி
மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி
மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி
ADDED : ஆக 14, 2011 03:05 AM
அனுப்பர்பாளையம் : மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, அனுப்பர்பாளையம் புதூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.கண்காட்சியில் மாணவர்களின்
பல்வேறு அறிவியல் படைப்புகள் பார்வைக்கு இடம்பெற்றன; 8 ம் வகுப்பு
மாணவர்கள் எரிமலையை தத்ருபமாக அமைத்திருந்தனர்.
எரிமலை உருவாகும் விதம்,
வெடிக்கும் முறை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்; 7ம்
வகுப்பு மாணவர்கள் வனவிலங்கு சரணாலயம் அமைத்துவிளக்கினர்.6ம் வகுப்பு
மாணவர்கள் புவி வெப்பமயமாவதால் ஏற்படும் தீமைகளை கூறினர்; 5ம் வகுப்பு
மாணவர்கள் மனித உடலில் இதயத்தின் பங்கு, இயக்கம் மற்றும் செயல்பாடுகள்
குறித்தும், 4ம் வகுப்பு மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் நன்மைகள், வானவில்
உருவாதல்; காற்றாலையின் மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தும்
விளக்கினர். 3ம் வகுப்பு மாணவர்கள் வீடு, பள்ளி மாதிரிகளை
அமைத்திருந்தனர்.முன்னதாக கண்காட்சியை தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, துவக்கி
வைத்தார்; ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் மலர்செல்வி செய்திருந்தார்.