/உள்ளூர் செய்திகள்/மதுரை/வங்கி ஏல சொத்தை மீட்க கீழ்கோர்ட்டை அணுகலாம்வங்கி ஏல சொத்தை மீட்க கீழ்கோர்ட்டை அணுகலாம்
வங்கி ஏல சொத்தை மீட்க கீழ்கோர்ட்டை அணுகலாம்
வங்கி ஏல சொத்தை மீட்க கீழ்கோர்ட்டை அணுகலாம்
வங்கி ஏல சொத்தை மீட்க கீழ்கோர்ட்டை அணுகலாம்
ADDED : ஜூலை 29, 2011 01:44 AM
மதுரை : திண்டுக்கல்லை சேர்ந்த சுபகிரி தாக்கல் செய்த மனு: நான் சில்வார்பட்டியில் இந்தோ பசிபிக் ஹவுசிங் பைனான்ஸ் வங்கியில் ஏலம் விடப்பட்ட வீடு மற்றும் நிலத்தை வாங்கினேன்.
வீடு, நிலத்திற்கு கடன் பெற்றவர், அதை திருப்பி செலுத்தாததால், வங்கி அவற்றை ஏலம் விட்டது. நான் கிரையம் பெற்ற பின்பும், கடன் வாங்கியவர், வீடு, நிலத்தை திருப்பி கொடுக்கவில்லை. அந்த வீடு, நிலத்தை வங்கி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பெற்று, அதை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைச்சாமி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வங்கி சார்பில் வக்கீல் பழ.ராமசாமி ஆஜரானார். நீதிபதிகள், ''வங்கி ஏல சொத்தை கிரையம் பெற்றவர், அதை மீட்பதில் பிரச்னை ஏற்படும் போது,
கீழ்கோர்ட்டை அணுகலாம். வங்கி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பெற்று கொடுக்கும்படி கூற முடியாது,'' என்றனர்.


