/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்
வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்
வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்
வாறுகாலில் மனித கழிவுகள்; வீடுகளுக்குள் கழிவு நீர்
விருதுநகர் நகராட்சி 26 வது வார்டில் நீராவி தெரு, நாராயணமடம் தெரு, கயிறுமுறுக்கு தோப்பு, இடும்ப வனம் தெரு, அருளப்பர் தெரு, இன்னாசியார் தெரு, ரோமன் கோயில் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன.
இது தொடர்பாக கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை. இப்பகுதி வழியாக விருதுநகர் நகருக்குள் இருந்து வரும் வாறுகால்கள் வழியாக மனித கழிவுகள் உட்பட அனைத்தும் வருகின்றன. மழை நேரங்களில் வாறுகால்களில் வரும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுகிறது. இதை சகிக்க முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். பல தெருக்களில் ரேடுகள் போடப்படாமல் மழை நேரங்களில் சேறும், சகதியுமாகி பொது மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.
குப்பை தொட்டிசேதமடைந்தும் , நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய தொட்டிகள் வைக்கப்படவில்லை. தெருக்களில் குப்பைகளை போடுவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இது தொடர்பாக இப்பகுதியினரின் குமுறல்கள் சில இதோ: எஸ்.பழனிக்குமார்: பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் கழிப்பறைஉள்ளது. மக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் புகார் செய்தும் ர நடவடிக்கை இல்லை .
-நமது சிறப்பு நிருபர் -


